Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகள் அவதி; இயங்காத லிப்டுகள்: 5 மாடி ஏற முடியலங்க

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகள் அவதி; இயங்காத லிப்டுகள்: 5 மாடி ஏற முடியலங்க

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகள் அவதி; இயங்காத லிப்டுகள்: 5 மாடி ஏற முடியலங்க

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகள் அவதி; இயங்காத லிப்டுகள்: 5 மாடி ஏற முடியலங்க

UPDATED : ஜன 29, 2024 07:46 AMADDED : ஜன 29, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 5 மாடிகள் கொண்ட தளத்திற்கு ஆறு லிப்டுகள் உள்ளன.

இதில் 4லிப்டுகள் இயங்காததால் நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கடந்த ஆண்டு ஆக.,மாதம் திறக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் அதி நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அறைகள், தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சைப்பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, ஸ்கேன் மையம், மருந்து, மாத்திரை வழங்கும் அறை, ரத்தப்பரிசோதனை அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. இங்கு 5 மாடிகள் கொண்ட தளத்திற்கு

ஆறு லிப்டுகள் உள்ளன. இதில் கிழக்கு புறத்தில் ஒரு

லிப்டும், மேற்குப்புறத்தில் ஒரு லிப்ட் மட்டுமே இயக்கத்தில்

உள்ளன. இதில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை

நிர்வாகம் தரப்பில் நோயாளிகள்,

மருத்துவமனைப்பணியாளர்கள் மட்டுமே லிப்டை

பயன்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும்

மாடிப்படிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்

காரணமாக நோயாளிகளை பார்க்க வரும் வயதான

உறவினர்கள், சிறுகுழந்தைகள் மாடிப்படி ஏறுவதற்கு மிகவும்

சிரமப்படுகின்றனர். நோயாளிகளை ஸ்டிரெட்சரில் வைத்து அழைத்து செல்லும் போது லிப்டுகள் இயங்காததால் நோயாளிகளுடன் காத்திருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக நோயாளிகள் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் அனைத்து லிப்டுகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்வையாளர்களும் லிப்டை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us