ADDED : ஜூன் 27, 2025 11:36 PM
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் இரவு திருப்பூர் சென்ற அரசு பஸ் ராமநாதபுரம் கழுகூரணி வாணி பஸ் நிறுத்தம்
அருகில் இரவு 8:15 மணிக்கு வந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த ரெகுநாதபுரம் மேலுார் தங்கராஜ் மகன் முத்து 45, பலியானார். பஸ் டிரைவர் முத்தழகு 44, மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.