ADDED : மே 21, 2025 11:55 PM
தொண்டி: தொண்டி அருகே தோமாயாபுரம் ஆற்றுப் பகுதியில் இன்ஸ்பெக் டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் மார்ச் 8ல் ரோந்து சென்ற போது சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய வாகனங்களை கைப்பற்றினர். இதில் மூன்று மாதமாக தலைமறைவாக இருந்த அடுத்தகுடி முருகானந்தம் 35, கைது செய்யப்பட்டார்.