Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

ADDED : ஜன 25, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்; -குடியரசு தின விழாவையொட்டி ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

நாளை (ஜன.,26) குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் மக்கள் கூடும் பொது இடங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், புனித தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று பாம்பன் கடலில் அமைந்துள்ள பழமையான ரயில் பாலத்தில் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., முத்து முனியசாமி தலைமையில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாலத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

மேலும் பாலத்தில் அந்நியர்கள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us