Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு மருத்துவமனையில் துாய்மைப்பணியாளர் நியமனம்

அரசு மருத்துவமனையில் துாய்மைப்பணியாளர் நியமனம்

அரசு மருத்துவமனையில் துாய்மைப்பணியாளர் நியமனம்

அரசு மருத்துவமனையில் துாய்மைப்பணியாளர் நியமனம்

ADDED : மார் 17, 2025 08:07 AM


Google News
திருவாடானை, : திருவாடானை அரசு மருத்துவமனையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக துாய்மைப் பணியாளர் நியமிக்கபட்டுள்ளார்.

திருவாடானையில் அரசு மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இங்கு பணியாற்றிய தற்காலிக துாய்மைப் பணியாளர் 2024 நவ., முதல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் விபத்து, கொலை, தற்கொலை செய்பவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரும் போது துாய்மை பணியாளர் இல்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பபட்டது.

குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லாத உடல்கள் மறுநாள் வரை அங்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே திருவாடானை அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர், துாய்மைப் பணியாளரை நியமிக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக ஏற்கனவே பணியாற்றிய மகாலிங்கம் என்பவர் துாய்மை பணியாளராக நியமிக்கபட்டுள்ளார். இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us