ADDED : செப் 13, 2025 03:48 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நீலகண்டி ஊருணி மேல்கரை அருகேயுள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் செப்.,10ல் வருடாபிேஷக விழா நடந்தது. காலையில் யாகசாலை பூஜையுடன், கும்ப கலசநீர் அபிேஷகம் செய்து, மூலவர், அம்மனுக்கு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது.
விழாவில் மாலை 6:00மணிக்கு உற்ஸவர் விசாலாட்சி அம்மன், பிரியாவிடை அம்மன், சுவாமி ஆகியோருக்கு அபிேஷகம் செய்து, மணக்கோலம் அலங்காரத்தில் திருக்கல்யாணம் நடந்தது. தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.