Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 92 கிலோ கடல் அட்டைகள்  தேவிபட்டினத்தில் பறிமுதல் 

92 கிலோ கடல் அட்டைகள்  தேவிபட்டினத்தில் பறிமுதல் 

92 கிலோ கடல் அட்டைகள்  தேவிபட்டினத்தில் பறிமுதல் 

92 கிலோ கடல் அட்டைகள்  தேவிபட்டினத்தில் பறிமுதல் 

ADDED : மார் 27, 2025 03:06 AM


Google News
ராமநாதபுரம்:- ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் கடற்கரையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 92 கிலோ கடல் அட்டைகள் பைபர் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

தேவிபட்டினம் கடற்கரையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை வைத்திருப்பதாக தொண்டி சுங்கத்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது பைபர் படகில் 92 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டை இருந்தது. இதனை மருத்துவ பயன்பாட்டிற்காக விற்பனைக்காக கொண்டு வந்த சிறுவனை பிடித்தனர். கடல் அட்டையை பைபர் படகுடன் பறிமுதல் செய்து ராமநாதபுரம் வனத்துறையினரிடம் சிறுவனுடன் ஒப்படைத்தனர்.

கடல் அட்டையை வாங்க வந்தவர் சுங்கத்துறையினரை பார்த்தவுடன் இரு சக்கர வாகனத்தை விட்டு தப்பி ஓடினார். வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் பதிவு எண்ணை வைத்து சம்பந்தப்பட்டவரை தேடி வருகின்றனர். கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.4 லட்சம். --------





      Our Apps Available On




      Dinamalar

      Follow us