Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மீனவர்கள் 7 பேருக்கு செப். 17 வரை காவல்

மீனவர்கள் 7 பேருக்கு செப். 17 வரை காவல்

மீனவர்கள் 7 பேருக்கு செப். 17 வரை காவல்

மீனவர்கள் 7 பேருக்கு செப். 17 வரை காவல்

ADDED : செப் 04, 2025 12:19 AM


Google News
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு செப்.,17 வரை சிறைக் காவலை நீட்டித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை 12ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஈசக்பவுல் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 4வது தடவையாக நேற்று மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை செப்., 17 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் போலீசார் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us