ADDED : செப் 07, 2025 03:00 AM
தொண்டி: தொண்டி அருகே புடனவயல் கிராமத்தில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் அக்கிராமத்தை சேர்ந்த ராசு 55, மற்றும் மூன்று பேர் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றனர்.
அப்போது நாய்கள் துரத்தி கடித்தது. மூன்று பேருக்கும் தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கபட்டது. இதில் ராசுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டதால் ராமநாதபுரம் அரசு மருத்துகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். நாய்கள் பெருக்கத்தை கட்டுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.