ADDED : ஜன 08, 2024 05:58 AM
கடலாடி : கடலாடி அருகே மேலச்செல்வனுாரில் இருந்து கீழச்செல்வனுார் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பயணிகள் ஏற்றிச் செல்லும் வேனில் 10 ஆடுகள் இருந்தன.
விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆடு திருட்டில் ஈடுபட்ட கடுகுசந்தை பாலமுருகன் 45, செவல்பட்டி முனியாண்டி 44, பறைங்குளம் முனியாண்டி 48 ஆகியோரை கைது செய்தனர்.