Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட 250 பேர்

தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட 250 பேர்

தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட 250 பேர்

தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட 250 பேர்

ADDED : ஜன 03, 2024 05:54 AM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தீயணைப்புத்துறை சார்பில் 2023ல் 250 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 2.87கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீ விபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 11 இடங்களில் தீயணைப்புநிலையங்கள் உள்ளன. 2023ல் 530 சிறு தீ விபத்துக்கள், 6 நடுத்தர தீ விபத்துக்கள், ஒரு பெரிய விபத்து என 537 தீ விபத்துக்கள் நடந்துள்ளன. 31.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. 2 கோடியே 87 லட்சத்து 26 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

தீ விபத்தில் சிக்கியவர்களில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 2252 பிற விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 21 பேர் பலியாகினர். 247 பேர் காப்பாற்றப்பட்டனர். 1785 விலங்கினங்கள் விபத்துக்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. 14 விலங்கினங்கள் இறந்துள்ளன என தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us