ADDED : ஜன 07, 2024 02:30 AM
சாயல்குடி:ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் கிழக்கு கடற்கரை சாலை பெட்ரோல் பங்க் அருகே வாகன ஆய்வு நடந்தது.
அப்போது மினி லாரியில் தலா 40 கிலோ எடை கொண்ட 52 மூடைகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது.
ரேஷன் அரிசி மூடைகளை கடத்திய மினி லாரி உரிமையாளர் துாத்துக்குடி மாவட்டம் தாத்தன்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 24, லோடுமேன் கோவில்பட்டி செக்கடி தெருவைச் சேர்ந்த பட்டுராஜன் 33, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.