/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/2,100 கிலோ ரேஷன் அரிசி சாயல்குடியில் பறிமுதல்2,100 கிலோ ரேஷன் அரிசி சாயல்குடியில் பறிமுதல்
2,100 கிலோ ரேஷன் அரிசி சாயல்குடியில் பறிமுதல்
2,100 கிலோ ரேஷன் அரிசி சாயல்குடியில் பறிமுதல்
2,100 கிலோ ரேஷன் அரிசி சாயல்குடியில் பறிமுதல்
ADDED : ஜன 07, 2024 01:44 AM
சாயல்குடி:ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் கிழக்கு கடற்கரை சாலை பெட்ரோல் பங்க் அருகே வாகன ஆய்வு நடந்தது.
அப்போது மினி லாரியில் தலா, 40 கிலோ எடை கொண்ட 52 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது.
ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய மினி லாரி உரிமையாளர் துாத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 24, லோடுமேன் கோவில்பட்டி செக்கடி தெருவைச் சேர்ந்த பட்டுராஜன், 33, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி மூட்டைகளை அரசு குடோவுனில் சேர்த்த போலீசார் கைதானவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.