ADDED : ஜூன் 07, 2024 04:56 AM

கமுதி: கமுதி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சந்தன மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கிராமத்தில் முக்கிய விதிகளில் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் முன்பு கிராம மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.
சந்தன மாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து 508 விளக்கு பூஜை நடந்தது. நிறைவு நாளில் முளைப்பாரி ஊர்வலமாக துாக்கிச் சென்று ஊருணியில் கரைத்தனர்.
ஏற்பாடுகளை அய்யனார்குளம் கிராம மக்கள் செய்தனர்.