Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி

வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி

வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி

வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி

ADDED : ஜூலை 18, 2024 10:01 PM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பொருள் இயல், புள்ளியில் துறை சார்பில் பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் புதிய டிஜிட்டல் முறையில் பயிர் அறுவடை பரிசோதனை குறித்து வேளாண், புள்ளியியல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குனர் ஜெயசங்கர் தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குனர் அமர்லால், தோட்டக்கலை துணை இயக்குனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பொதுப்பயிர் மதிப்பீட்டாய்வு அலைபேசியை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பயிர் அறுவடையை எவ்வாறு கணக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து காப்பீடு திட்ட பயிற்றுனர்கள் வேளாண் அலுவலர்கள், புள்ளியியல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us