/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஊரை விட்டே ஒதுக்கிட்டாங்க... மகளிர் உரிமைத்தொகை வழங்கல... குறைதீர்க்கும் கூட்டத்தில் குவிந்த மனுக்கள் ஊரை விட்டே ஒதுக்கிட்டாங்க... மகளிர் உரிமைத்தொகை வழங்கல... குறைதீர்க்கும் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
ஊரை விட்டே ஒதுக்கிட்டாங்க... மகளிர் உரிமைத்தொகை வழங்கல... குறைதீர்க்கும் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
ஊரை விட்டே ஒதுக்கிட்டாங்க... மகளிர் உரிமைத்தொகை வழங்கல... குறைதீர்க்கும் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
ஊரை விட்டே ஒதுக்கிட்டாங்க... மகளிர் உரிமைத்தொகை வழங்கல... குறைதீர்க்கும் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
ADDED : ஜூலை 09, 2024 04:58 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்கோயில் பிரச்னையில் ஊரைவிட்டு ஒதுக்கி விட்டார்கள்.விண்ணப்பித்தும் மகளிர் உரிமைத்தொகை வழங்கவில்லை உள்ளிட்டகுறைகள், கோரிக்கைகள் என 424 மனுக்கள் அளித்தனர்.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கத்தில்மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர்கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார்.
கீழக்கரை தாலுகாநத்தம் குளபதம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மனு அளித்தனர். அதில், கூலி வேலை பார்க்கிறோம். எங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். மகளிர் உரிமைத்தொகை வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றனர்.
கீழக்கரை தாலுகா காஞ்சிரங்குடி மேலவலசை இதயரஞ்சித் அவரது உறவினர்கள் மனு அளித்தனர். அதில், கோயில் விழா தொடர்பான பிரச்னையில் தங்களை நிர்வாகிகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டனர். ஊரில் பிரிவினை ஏற்படுத்துவோர் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதே போல பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை என 424 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பேருக்கு 11 லட்சத்து 28 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள செயற்கை கால்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
உதவி கலெக்டர்(பயிற்சி)மொகத் இர்பான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர் மற்றும் அரசு அலுவலர்கள்பங்கேற்றனர்.