Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பதிவு செய்ய வழிமுறை தெரியாததால் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் விழிப்புணர்வு இல்லை

பதிவு செய்ய வழிமுறை தெரியாததால் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் விழிப்புணர்வு இல்லை

பதிவு செய்ய வழிமுறை தெரியாததால் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் விழிப்புணர்வு இல்லை

பதிவு செய்ய வழிமுறை தெரியாததால் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் விழிப்புணர்வு இல்லை

ADDED : ஜூலை 23, 2024 04:54 AM


Google News
மத்திய அரசு பிரதமர்பயிர் பாதுகாப்பு காப்பீட்டு திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உருவாக்கி எளிய முறையில் தவணை செலுத்துவதற்கு வழிசெய்துஉள்ளது. இத்திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை.

அவ்வாறு இருந்தாலும் வழிமுறைகள் தெரியாததால் யாரும் விண்ணப்பிக்க முன் வருவதில்லை. இக்கட்டான நிலையில் இருக்கும் போது தான் இன்சூரன்ஸ் கட்டாததுகுறித்து பலருக்கும் கவலை ஏற்படுகிறது.

திட்டம் குறித்து அதிகாரிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று ஏழை மக்கள், கூலி தொழிலாளர்களிடம் இத்திட்டங்களின் நன்மைகள் குறித்து தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். திருவாடானை தாலுகாவில் சில மாதங்களுக்கு முன் ஊராட்சி அலுவலகங்களில் இதற்கான முகாம் நடந்தது.

ஆனால் ரேஷன் கார்டில் குறியீட்டை வைத்து பதிவு செய்யும் போது விடுபடுவதால் நிறைய பேர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், தமிழகத்தில் பி.எச்.எச்., என்.பி.எச்.எச்., உள்ளிட்ட 5 வகை ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டு அனைத்தும்ஒரே வகையாக இருந்தாலும், அதில் இருக்கும் குறியீடுகளை வைத்தே எந்த வகை என அறிந்து கொள்ள முடியும்.

இதில் பி.எச்.எச்.,கார்டை வைத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.ஆனால் ஆன்லைனில் பார்த்த போது நிறைய பேருக்கு லிஸ்ட்டில் பதிவாகாமல் விடுபட்டுஉள்ளது என்றனர்.

ஆகவே பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் அனைவரும் பயன் பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us