ADDED : ஜூன் 21, 2024 04:07 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கோட்டையன் வலசையைச் சேர்ந்த வேலுச்சாமி 45. இவர் ஜூன் 16ல் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினார். அப்போது தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.