Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியவர் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியவர் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியவர் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியவர் கைது

ADDED : ஜூலை 04, 2024 02:41 AM


Google News
ராமநாதபுரம்:-சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே அத்தியூத்து கிராமத்தை சேர்ந்த ராமையா மகன் அசோக் 28. இவர் மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த 17 வயது உறவினரான சிறுமியை திருமணம் செய்துள்ளார்.சிறுமி 8 மாதம் கர்ப்பிணியாகியுள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக வந்துள்ளார். கர்ப்பிணியாக உள்ளவர் சிறுமி என்பதை அறிந்து அங்குள்ளவர்கள் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தெரிவித்தனர்.

போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அசோக் சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்ததால் அசோக் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us