ADDED : ஜூன் 11, 2024 10:50 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறியுள்ளதாவது:
வன விரிவாக்கச்சரகத்தின் கீழ் பரமக்குடி அருகே கமுதக்குடியில் வனத்துறை மத்திய நாற்றங்காலில் மகாகனி, மா, வேங்கை, கொய்யா, புளி, வேம்பு, மாதுளம், சொர்க்கம் ஆகிய மரக்கன்றுகள் வளர்க்கபடுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் விவசாய நிலம், பள்ளிக்கூடம், பொது இடம், தொழில் நிறுவனம் போன்ற இடங்களில் நட்டு வளர்ப்பதற்கு விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
மரக்கன்றுகளை பெறுவதற்கு தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், சிட்டா (தேவைப்படின்) ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.
மரக்கன்றுகள் தேவைக்கு நாகராஜன் வனசரக அலுவலர் 63839 40433, கேசவமூர்த்தி, வனவர் 99769 69370 என்ற அலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.