Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூன் 13, 2024 05:37 AM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில்சேர பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்திருப்பதாவது: மாவட்டத்தில் 33 பள்ளி விடுதிகள், 4 கல்லுாரி விடுதிகள், மாணவிகளுக்கு 22 பள்ளி விடுதிகள், 6 கல்லுாரி விடுதிகள் செயல்படுகின்றன.

பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் கல்லுாரி விடுதிகளில் பட்டபடிப்பு,பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்கள் சேரத் தகுதியுடையவர்கள். மாணவர்கள் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பு சீர் மரபினர் விடுதிகளில் அனைத்து மாணவர்களும் விகித்தாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விடுதிகளில் மூன்று வேளை உணவு, தங்கும் வசதியும், 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்படும். 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு வழிகாட்டிகள், வினா வங்கி நுால்கள் வழங்கப்படும். முதலாண்டு மாணவர்களுக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பாய்கள் வழங்கப்படும்.

பெற்றோர், பாதுகாவலருக்கு ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தப் பட்சம் 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். இந்த துார விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவர்கள் விடுதி காப்பாளர்களிடமிருந்தோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விடுதி காப்பாளர்களிடம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் ஜூன் 14 க்குள்ளும், கல்லுாரி மாணவர்கள் ஜூலை 15க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். ஜாதி மற்றும் வருமான சான்று அளிக்கத்தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் வழங்கினால் போதுமானது. முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us