Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலங்கை  போலீஸ்காரர்  வழக்கு  தள்ளிவைப்பு

இலங்கை  போலீஸ்காரர்  வழக்கு  தள்ளிவைப்பு

இலங்கை  போலீஸ்காரர்  வழக்கு  தள்ளிவைப்பு

இலங்கை  போலீஸ்காரர்  வழக்கு  தள்ளிவைப்பு

ADDED : ஜூன் 22, 2024 05:04 AM


Google News
ராமநாதபுரம்: -போதைப்பொருள் திருடி தலைமறைவாகி தப்பி வந்து தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு விசாரணை ஜூலை 18 க்கு தள்ளி வைக்கப்பட்டது.

கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியில் ஒரு மரக்கடையில் இருந்து 2020-ம் ஆண்டு ஆக.26-ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இது தொடர்பாக கைதான மரக்கடை உரிமையாளர் அளித்த தகவலின்படி அனுர குமார என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான இவர் இலங்கை துறைமுக போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் 32, அண்ணன். பிரதீப் குமார் பண்டாரா இலங்கை துறைமுகம் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை பணி நேரத்தில் திருடி சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர்.

இதனால் பிரதீப் குமார் பண்டாராவை வழக்கில் சேர்த்து விசாரிக்க அந்நாட்டு போலீசார் முடிவு செய்தனர். இது பற்றி அறிந்த அவர் பைபர் படகில் தமிழகம் தப்பி வந்தார். அவரை 2020 செப்.4ல் மண்டபம் கடலோர காவல்படை போலீசார் கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை போலீஸ்காரர் நேரில் ஆஜரானார். நீதிபதி விசாரணையை ஜூலை 18க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us