/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை; மாணவர்கள் அவதி அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை; மாணவர்கள் அவதி
அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை; மாணவர்கள் அவதி
அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை; மாணவர்கள் அவதி
அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை; மாணவர்கள் அவதி
ADDED : ஜூன் 10, 2024 11:24 PM
திருப்புல்லாணி : திருப்புல்லாணியில் எஸ்.எஸ்.ஏ., நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப வகுப்பறைகள் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. தலைமையாசிரியர் உட்பட 14 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த வகுப்பறை கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்ட நிலையில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படாததால் மாணவர்கள் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மரத்தடி நிழலில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தொகுதி தலைவர் அப்துல் வஹாப் கூறியதாவது:
இங்கு ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் இடப்பற்றாக்குறையால் சிரமப்படுகின்றனர். முன்பிருந்த கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளதால் அவ்விடம் காலியாக உள்ளது. மழைக்காலங்களில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே அடுக்குமாடி கட்டமைப்பு கொண்ட வகுப்பறை தேவை குறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். முதன்மை கல்வி அலுவலரிடம் இது குறித்து கேட்டதற்கு நபார்டு வங்கி மூலம் தொகை பெறப்பட்டவுடன் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படும் என்றார்.
எனவே மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.