ADDED : ஆக 05, 2024 07:07 AM

பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக்கல்லுாரியில் பொருளாதாரத்துறை சார்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் சிவகுமார் தலைமை வகித்தார்.
பொருளாதாரத் துறை தலைவர் விஜயகுமார் வரவேற்றார். வரலாற்றுத் துறை தலைவர் கோவிந்தன் அறிமுக உரையாற்றினார்.
கருத்தரங்கில் பொருளாதாரத்தில் உயர்ந்த படிப்புகள் குறித்த வழிமுறைகள் மற்றும் அதில் உள்ள வாய்ப்புகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
சென்னை கிறிஸ்தவ கல்லுாரி பொருளாதார துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் பங்கேற்றார்.உதவி பேராசிரியை கற்பகவள்ளி நன்றி கூறினார்.