ADDED : ஜூன் 19, 2024 04:42 AM
கீழக்கரை : கீழக்கரையில் உள்ள சதக்கதுன் ஜாரியா உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தலைமையாசிரியர் செய்யது அலி பாத்திமா தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் பாபு முன்னிலை வகித்தார்.
கடந்த 1986ல் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் கீழை அஸ்ரப் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.