Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இ.சி.ஆர்.,ரோட்டில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரத்தை அகற்றுங்க 

இ.சி.ஆர்.,ரோட்டில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரத்தை அகற்றுங்க 

இ.சி.ஆர்.,ரோட்டில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரத்தை அகற்றுங்க 

இ.சி.ஆர்.,ரோட்டில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரத்தை அகற்றுங்க 

ADDED : ஜூலை 05, 2024 10:52 PM


Google News
தொண்டி: கிழக்கு கடற்கரை ரோட்டில் சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்துராமு கூறியதாவது:

எஸ்.பி.பட்டினம் முதல் சாயல்குடி வரை கிழக்கு கடற்கரை ரோட்டின் இரு பக்கமும் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ரோட்டை மறைக்கிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கபட்டுள்ளனர். டூவீலர்களில் செல்பவர்கள் எதிரில் வரும் வாகனத்திற்கு வழிவிடும் போது முட்கள் குத்தி காயமடைகின்றனர்.

கால்நடைகள் வாகனங்கள் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே சீமைகருவேல மரங்களை உடனே அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us