Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது

ADDED : ஜூலை 05, 2024 10:04 PM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடல் நேற்று 100 மீ., உள்வாங்கியது. இதனால், நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடல் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு 100 மீ., உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தன.

மேலும் சிறிய மீன் குஞ்சுகள், கடல் சிற்பிகள் சிறுகுழியில் தேங்கி கிடந்த கடல்நீரில் தத்தளித்து கொண்டிருந்தன. காலை 6:00 மணிக்கு புனித நீராட வந்த பக்தர்கள் கடல் உள்வாங்கி இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.

பின் மதியம் 12:00 மணிக்கு கடல் நீர்மட்டம் உயர்ந்ததும் அக்னி தீர்த்த கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசும் சீசனில் கடல்நீர் உள்வாங்குவதும், பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us