/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காற்றுடன் மழையால் மின்தடை: மக்கள் அவதி காற்றுடன் மழையால் மின்தடை: மக்கள் அவதி
காற்றுடன் மழையால் மின்தடை: மக்கள் அவதி
காற்றுடன் மழையால் மின்தடை: மக்கள் அவதி
காற்றுடன் மழையால் மின்தடை: மக்கள் அவதி
ADDED : ஜூன் 08, 2024 05:25 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் இரவு, காலை முதல் மாலை வரை மிதமான மழையும், தொடர்ந்து பலத்த காற்று காரணமாக 2 மணி நேரம் மின்தடையால் சிரமப்பட்டனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரண்டு நாட்களாக பலத்த காற்றும் மிதமான சாரல் மழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக திருவாடானையில் 68 மி.மீ., தொண்டி - 88 மி.மீ., ஆர்.எஸ்.மங்கலம் - 42 மி.மீ., பரமக்குடியில் 18.80 மி.மீ., என மாவட்டம் முழுவதும் 300 மி.மீ., மழை பதிவாகியுள்து. இதனால் பஸ்ஸ்டாண்ட் ரோடு, அரண்மனை சந்தை ரோடு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஆர்.எஸ்.மடை துணை மின்நிலைய மின்வினியோகம் பாதிப்பால் நேற்று காலை 7:20 முதல் 9:20 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் சிரமப்பட்டனர்.