/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் இரவில் தொடரும் மின்தடை பரமக்குடியில் இரவில் தொடரும் மின்தடை
பரமக்குடியில் இரவில் தொடரும் மின்தடை
பரமக்குடியில் இரவில் தொடரும் மின்தடை
பரமக்குடியில் இரவில் தொடரும் மின்தடை
ADDED : ஜூன் 19, 2024 06:08 AM
பரமக்குடி, ; -பரமக்குடியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின் தடை தொடர்ந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி பகுதியில் உப மின் நிலையம் செயல்படுகிறது. காவனுார் மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை அளிக்கப்படுகிறது. பரமக்குடி, எமனேஸ்வரம் உள்ளிட்ட 36 வார்டுகளிலும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்தடை நீடித்தது.
ஐந்து நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை நீடித்த மின்தடையால் மக்கள் துாக்கம் தொலைத்தனர். மேலும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், கோடை வெப்பம் காரணமாக வீடுகளில் ஏ.சி., பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு முறை மின் சப்ளையை சீர் செய்தாலும் மீண்டும் மீண்டும் டிரான்ஸ்பார்மர்கள் டிரிப் ஆகியதால் மின்தடை தவிர்க்க முடியாததாகிவிட்டது.
தொடர்ந்து வரும் நாட்களில் மின் தேவை குறையும் நிலையில் மின்தடைக்கு வாய்ப்பு இருக்காது என்றனர்.