/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானையில் மேகமூட்டம்; குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி திருவாடானையில் மேகமூட்டம்; குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி
திருவாடானையில் மேகமூட்டம்; குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி
திருவாடானையில் மேகமூட்டம்; குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி
திருவாடானையில் மேகமூட்டம்; குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 04, 2024 05:47 AM

திருவாடானை : திருவாடானை, தொண்டியில் 3 நாட்களாக மேகமூட்டமாக காணப்படுகிறது. வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுதால் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது. திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மேகமூட்டமாக உள்ளது. மழை பெய்யவில்லை, குளிர்ந்த காற்றுடன் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
அதேசமயம் தற்போது கோடை உழவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் மழை பெய்தால் வேளாண் பணிகள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கூறினர்.