Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் கைதி உயிரிழந்த  வழக்கு விசாரணை; ஜூலை 4 க்கு தள்ளிவைப்பு 

பரமக்குடியில் கைதி உயிரிழந்த  வழக்கு விசாரணை; ஜூலை 4 க்கு தள்ளிவைப்பு 

பரமக்குடியில் கைதி உயிரிழந்த  வழக்கு விசாரணை; ஜூலை 4 க்கு தள்ளிவைப்பு 

பரமக்குடியில் கைதி உயிரிழந்த  வழக்கு விசாரணை; ஜூலை 4 க்கு தள்ளிவைப்பு 

ADDED : ஜூன் 24, 2024 11:52 PM


Google News
ராமநாதபுரம் : பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சாட்சிகள் விசாரணைக்குப்பிறகு நீதிபதி குமரகுரு ஜூலை 4க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

மதுரையை சேர்ந்தவர் ராமானுஜன் மகன் வெங்கடேசன் 26. திருட்டு வழக்கு தொடர்பாக 2012ம் ஆண்டு அக்.2-ல் பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டவர் உயிரிழந்தார்.

இவர் போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஓய்வு பெற்ற எஸ்.ஐ., முனியசாமி ஜாமினில் வந்த பின் உடலநலக்குறைவால் இறந்தார்.

இந்த வழக்கில் ஏட்டு பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல், ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் கோதண்டம், ஞானசேகரன் மட்டுமே ஆஜராகினர். கிருஷ்ணவேல் ஆஜராகவில்லை. நீதிபதி குமரகுரு வழக்கு விசாரணையை ஜூலை4க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us