/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூலி உயர்வை அமல்படுத்த கோரிக்கை பரமக்குடி கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூலி உயர்வை அமல்படுத்த கோரிக்கை
பரமக்குடி கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூலி உயர்வை அமல்படுத்த கோரிக்கை
பரமக்குடி கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூலி உயர்வை அமல்படுத்த கோரிக்கை
பரமக்குடி கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூலி உயர்வை அமல்படுத்த கோரிக்கை
ADDED : ஜூலை 12, 2024 04:14 AM
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதியில் உள்ள, ராமநாதபுரம் மாவட்ட காமராஜர் கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்து தீர்மானங்களை விளக்கி பேசினார். அப்போது 2023ம் ஆண்டு சங்க வரவு, செலவு கணக்கு வாசித்து தீர்மானிக்கப்பட்டது.
மேலும் கைத்தறி தொழிலை நம்பி உள்ள நெசவாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தனியார் மாஸ்டர் வீவர்கள் கூலி உயர்வு ஒப்பந்தம் பேசி கையெழுத்திட்டும், அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
ஆகவே உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்தாத நிலையில் ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மத்திய அரசு கதர் துணிகளுக்கு ஜி.எஸ்.டி., வரியை அமல்படுத்தாமல் உள்ளது போல், கைத்தறிகளுக்கும் விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், ரமேஷ், ராமமூர்த்தி, ரெங்காச்சாரி, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கெங்காதரன் நன்றி கூறினார்.