Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாம்பன் புதிய பாலத்தில் ரயில் அக்டோபரில் சோதனை ஓட்டம் ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் அக்டோபரில் சோதனை ஓட்டம் ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் அக்டோபரில் சோதனை ஓட்டம் ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் அக்டோபரில் சோதனை ஓட்டம் ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

ADDED : ஜூலை 12, 2024 02:29 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்:பாம்பன் புதிய பாலத்தில் அக்டோபரில் ரயில் பெட்டி சோதனை ஓட்டம் நடக்கும் என ரயில்வே வாரிய உறுப்பினர் அனில்குமார் கண்டேல்வால் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானம் மற்றும் ராமேஸ்வரத்தில் ரூ.120 கோடியில் ரயில்வே ஸ்டேஷன் மறு சீரமைப்பு பணியும் நடக்கிறது. இப்பணியை நேற்று ரயில்வே வாரிய உறுப்பினர் அனில்குமார் கண்டேல்வால் ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது: புதிய பாலம் கட்டுமானப் பணி இரு மாதத்தில் முடியும். அக்டோபரில் புதிய பாலத்தில் ரயில் பெட்டி சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

அதன்பின் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கப்படும். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணியும் டிசம்பரில் முடிவடைய வாய்ப்பு உள்ளது என்றார்.

ரயில்வே வாரிய (நிலம் மற்றும் வசதிகள் பிரிவு) நிர்வாக இயக்குனர் பங்கஜ் தியாகி, தென்னக ரயில்வே தலைமை முதன்மை பொறியாளர் ஆர்.எஸ்.கெலாட், கட்டுமான பிரிவு தலைமை அதிகாரி அமித்குமார் மானுவால், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா உட்பட பலர் இருந்தனர்.

இரு ரயில் இன்ஜின் சோதனை


இங்கு 2.1 கி.மீ., பாம்பன் புதிய பாலத்தில் 1.6 கி.மீ.,ல் 100 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இந்த பாலத்தில் நேற்று மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் இருந்து புறப்பட்ட 2.64 லட்சம் கிலோ எடையுள்ள இரு ரயில் இன்ஜின்கள் 3 முறை சோதனை ஓட்டம் நடத்தி புதிய பாலத்தின் உறுதி தன்மையை ரயில்வே வாரிய உறுப்பினர், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us