ADDED : ஜூலை 10, 2024 05:02 AM

பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள சப்தேழு கன்னிமார் அம்மன் கோயிலில் வராகி அம்மன் நவராத்திரி விழா நடந்தது. இக்கோயிலில் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் சொர்ண வராஹி அம்மனுக்கு ஜூலை 6 முதல் ஆஷாட நவராத்திரி விழா துவங்கி நடக்கிறது.
முதல் நாள் அம்மன் வராஹி அலங்காரம், இரண்டாம் நாள் சந்தன காப்பு, தொடர்ந்து மூன்றாம் நாளில் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தினமும் இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையில் ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
ஏற்பாடுகளை சப்தேழுபெரிய கன்னிமார் அம்மன் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.