/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முகூர்த்த தினம்: ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதி முகூர்த்த தினம்: ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதி
முகூர்த்த தினம்: ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதி
முகூர்த்த தினம்: ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதி
முகூர்த்த தினம்: ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதி
ADDED : ஜூலை 13, 2024 04:43 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சுபமுகூர்த்த நாட்களில் வழிவிடு முருகன் கோயில் பகுதியில் ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.
இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது.
நேற்று முகூர்த்த நாளை முன்னிட்டு வழி விடுமுருகன் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.
அப்போது ரோட்டோரத்தில்இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை கண்டபடி நிறுத்தினர்.
இதே போல அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டிலும் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தினர்.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
முகூர்த்த நாட்களில் வழிவிடு முருகன் கோயில் ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த கூடுதல் போலீசார் நியமிக்க எஸ்.பி., சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.