Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானையில் நாளை ஜமாபந்தி துவக்கம்   

திருவாடானையில் நாளை ஜமாபந்தி துவக்கம்   

திருவாடானையில் நாளை ஜமாபந்தி துவக்கம்   

திருவாடானையில் நாளை ஜமாபந்தி துவக்கம்   

ADDED : ஜூன் 10, 2024 05:53 AM


Google News
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் நாளை (ஜூன் 11ல்) மாவட்ட பிற்படுத்தபட்டோர், சிறுபான்மை நல அலுவலர் மாரிமுத்து தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.

ஜூன் 11ல் மங்களக்குடி பிர்கா நெய்வயல், துத்தாகுடி, பழங்குளம், கடம்பூர், நீர்க்குன்றம், கட்டவிளாகம், பாகனுார், கூகுடி, மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை, கட்டிமங்கலம், பனிச்சகுடி, சித்தாமங்கலம், ஜூன் 12 ல் புல்லுார் பிர்கா என்.எம்.மங்கலம், சிறுகம்பையூர், ஓரியூர், மருங்கூர்,

புல்லுார், ஆக்களூர், நகரிகாத்தான், மல்லனுார், வட்டாணம், கலியநகரி, மச்சூர், ஓடவயல், கொடிப்பங்கு, முத்துராமலிங்கபட்டினம் ஆகிய கிராம கணக்குகள் ஆய்வு செய்யப்படும்.

ஜூன் 13ல் தொண்டி பிர்கா தேளூர், கருங்காலக்குடி, வேலங்குடி, தொண்டி, சின்னத்தொண்டி, தளிர்மருங்கூர், காடாங்குடி, செக்காந்திடல், கீழஅரும்பூர், பட்டமங்களம், குளத்துார், திருவெற்றியூர், கடம்பனேந்தல், முகிழ்த்தகம், நம்புதாளை, கானட்டாங்குடி, புதுப்பட்டினம், அ.மணக்குடி, ஆழிகுடி, ஆகிய கிராமங்களும், ஜூன் 14ல் திருவாடானை பிர்கா ஆரசூர், ஆட்டூர், பாரூர், ஓரிக்கோட்டை, டி.நாகனி, இளையத்தான்வயல், பாண்டுகுடி, கிளியூர், அஞ்சுகோட்டை, கடம்பாகுடி, மாவூர், ஆதியூர் ஆகிய கிராம கணக்குகள் ஆய்வு செய்யப்படும்.

பொதுமக்கள் மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்து பயன்பெறலாம் என தாசில்தார் கார்த்திகேயன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us