ADDED : ஜூலை 02, 2024 10:15 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொழிலாளர் துறை சார்பில் கடலாடி அருகேகாவாகுளம் கிராமத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குநலவாரிய உறுப்பினர் அட்டை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார். 52 தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டைகள், உதவித்தொகை வழங்கப்பட்டது. தொழிலாளர் உதவி ஆணையர் குலசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.