ADDED : ஜூலை 03, 2024 02:21 AM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் 2.1 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது.
இதில் 1.6 கி.மீ.,ல் பாலம் அமைக்கப்பட்டு 100 சதவீதம் பணிகள் முடிந்தன.
எதிர்காலத்தில் பாம்பன் ரயில் பாலத்தில் மின்சார ரயில்கள் இயக்க வசதியாக மின்கம்பங்கள் பொருத்தப்பட்டன. இந்த மின்கம்பங்களில் நேற்று ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் இரும்பு கொக்கியை பொருத்தினர்.
இந்நிலையில் மீதமுள்ள 500 மீட்டரில் துாக்கு பாலம் பொருத்தும் பணி நடக்கும் நிலையில் தற்போது துாண்களில் இரும்பு கர்டர்கள், தண்டவாளங்கள் பொருத்தப்படுகின்றன.