ADDED : ஜூன் 21, 2024 02:25 AM

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவசாயி மதியழகன் 55, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
முதுகுளத்துார் அருகே அ.பழங்குளத்தை சேர்ந்த மதியழகன் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி தாயாரை காண வயலுக்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தாயாரிடம் தெரிவித்தார். கீழத்துாவல் போலீசில் தாய் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் போக்சோ பிரிவில் மதியழகனை கைது செய்தனர்.