/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வரத்து அதிகரிப்பால் சந்தையில் சாத்துக்குடி கிலோ ரூ.50 வரத்து அதிகரிப்பால் சந்தையில் சாத்துக்குடி கிலோ ரூ.50
வரத்து அதிகரிப்பால் சந்தையில் சாத்துக்குடி கிலோ ரூ.50
வரத்து அதிகரிப்பால் சந்தையில் சாத்துக்குடி கிலோ ரூ.50
வரத்து அதிகரிப்பால் சந்தையில் சாத்துக்குடி கிலோ ரூ.50
ADDED : ஜூலை 11, 2024 04:55 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்திற்கு வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் சாத்துக்குடி கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் குறைந்த அளவே சாகுபடி நடக்கிறது. குறிப்பாக ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து ராமநாதபுரம் வாரச்சந்தையில் விற்கின்றனர்.
ஆந்திராவில் அனந்தபூர், கடப்பா, நெல்லுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாத்துக்குடி விளைவிக்கப்படுகிறது. அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விற்பனைக்கு வருகிறது.
தற்போது ராமநாதபுரம் சந்தைக்கு சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த மாதம் கிலோ ரூ.70 வரை விற்றது விலை குறைந்து ரூ.50க்கு விற்கப்படுவதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.