Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குடிநீர் வரல... ரோடும் சேதம்... குமரன் காலனி மக்கள் குமுறல்

குடிநீர் வரல... ரோடும் சேதம்... குமரன் காலனி மக்கள் குமுறல்

குடிநீர் வரல... ரோடும் சேதம்... குமரன் காலனி மக்கள் குமுறல்

குடிநீர் வரல... ரோடும் சேதம்... குமரன் காலனி மக்கள் குமுறல்

ADDED : ஆக 06, 2024 04:53 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் கொட்டக்குடி அருகே குமரன்காலனிக்கு பல மாதங்களாக குடிநீர் வருவது இல்லை. ரோடு, பஸ் வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

கொட்டக்குடி ஊராட்சி குமரன் காலனியை சேர்ந்த கிராமமக்கள் ராமநாதபுரம் கலகெ்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம்மனு அளித்தனர்.

அதில், ஊருக்கு குடிநீர் வந்து பல மாதங்கள் ஆகிறது. அருகேயுள்ள கொட்டக்குடிக்கு சென்று குடிநீர் எடுக்கிறோம்.அவர்கள் சண்டைக்கு வருகின்றனர். குடம் ரூ.12க்கு குடிநீரைவிலைக்கு வாங்கி சிரமப்படுகிறோம். ரோடு வசதியும் இல்லை. அரசு பஸ்கள் ஊருக்குள் வராததால் மாணவர்கள், கூலி வேலைக்குசெல்பவர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. கண்மாய், ஊருணி 50 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது.

அவற்றை துார் வாரவேண்டும். ஊருக்கு குடிநீர், ரோடு, பஸ் வசதி செய்துதரகலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us