ADDED : ஜூலை 14, 2024 04:02 AM
திருவாடானை, : தொண்டி அருகே எஸ்.பி. பட்டினம் நுார்ஆனியா தெருவை சேர்ந்தவர் கலந்தர் அப்பாஸ் 42. சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றார்.
நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்த போது கதவை உடைத்து பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் 3500 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
கலந்தர் அப்பாஸ் புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.