Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் கோயில் முன் டூவீலர்களால் ஆக்கிரமிப்பு பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் கோயில் முன் டூவீலர்களால் ஆக்கிரமிப்பு பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் கோயில் முன் டூவீலர்களால் ஆக்கிரமிப்பு பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் கோயில் முன் டூவீலர்களால் ஆக்கிரமிப்பு பக்தர்கள் அவதி

ADDED : ஜூன் 06, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் சன்னதி முன்பு டூவீலர்கள் ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மேற்கு வாசல் நுழைவில் முருகன் சன்னதி உள்ளது.

இச்சன்னதி முன் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள், கோயிலுக்குள் சுவாமி கும்பிட செல்பவர்கள் டூவீலர்களை முருகன் சன்னதி முன்பு நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் முறையிட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் முருகன் சன்னதி முன் டூவீலர்கள் ஆக்கிரமிப்பு பகுதியாக மாறிவிட்டது.

இதனால் போக்குவரத்து இடையூறாகவும், சுவாமி தரிசனம் செய்தவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் டூவீலர்களுக்கு அபராதம் விதித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us