Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

ADDED : ஜூலை 22, 2024 04:32 AM


Google News
திருப்புல்லாணி: ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு அரசு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்புல்லாணியில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தர்மராஜ் முன்னிலை வைத்தார். பொருளாளர் பானுமதி வரவேற்றார்.

ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிடவும், பணி ஓய்வின்போது பணிக்கொடையாக ரூ.2 லட்சம் வழங்கிடவும், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.

தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயபால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us