Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கோரிக்கை

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கோரிக்கை

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கோரிக்கை

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கோரிக்கை

ADDED : ஜூலை 05, 2024 10:42 PM


Google News
தொண்டி : தொண்டி அருகே நம்புதாளையில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. நம்புதாளை ஊராட்சி தலைவர் பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கண்ணன் முன்னிலைவகித்தார்.

பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும். உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற ஷிரின் சுபைரா, அபிநவவித்யா, அதிபாஷிரின் ஆகியாருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us