Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தனுஷ்கோடியில் இரும்பு தகவல் பலகை சேதம்: விபத்து அபாயம்

தனுஷ்கோடியில் இரும்பு தகவல் பலகை சேதம்: விபத்து அபாயம்

தனுஷ்கோடியில் இரும்பு தகவல் பலகை சேதம்: விபத்து அபாயம்

தனுஷ்கோடியில் இரும்பு தகவல் பலகை சேதம்: விபத்து அபாயம்

ADDED : ஜூன் 20, 2024 04:40 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தகவல் பலகை சேதமடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தனுஷ்கோடியில் புயலில் இடிந்த சர்ச், விநாயகர் கோயில் கட்டடங்கள் மற்றும் அரிச்சல்முனை கடற்கரையை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இவர்களுக்கு வழிகாட்டியாக தனுஷ்கோடி சர்ச் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தகவல் பலகை உள்ளது.

இந்த பலகை உப்பு காற்றில் துருப்பிடித்து முக்கால் வாசி சேதமடைந்து கீழே விழுந்தது.

மேலும் சில இரும்பு தகடுகள் சேதமடைந்து தொங்கி கொண்டிருக்கிறது.

இது சுற்றுலாப் பயணிகள் மீது விழுந்து விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

சேதமடைந்த இரும்பு தகவல் பலகையை அகற்றி புதுப்பிக்க சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் சமூக நல ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை.

எனவே கலெக்டர் விஷ்ணு சந்திரன் சேதமடைந்த தகவல் பலகையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us