ADDED : ஜூன் 06, 2024 05:25 AM
தொண்டி, : திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவில் பலத்த காற்றுக்கு மின்கம்பி அறுந்து விழுந்தது.
அக்கம்பியை அந்தப்பக்கமாக மேய்ச்சலுகாக சென்ற ஒரு பசுமாடு மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானது. திருவாடானை அருகே பூவானி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் ஓட்டு வீட்டில் மின்னல் தாக்கியதில் வீடு சேதமடைந்தது. வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.