ADDED : ஜூலை 19, 2024 11:48 PM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
சோழந்துார், பிச்சங்குறிச்சி, கருங்குடி, கொத்திடல் களக்குடி, பாரனுார், திருப்பாலைக்குடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யூனியன் தலைவர் ராதிகா, பி.டி.ஓ.,க்கள் லட்சுமி, மலைராஜ், தாசில்தார் வரதராஜ், மண்டல துணை தாசில்தார் உதயகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ஹேமாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.