/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஓலா ஸ்கூட்டர் ஏஜன்சியில் மோசடி உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு ஓலா ஸ்கூட்டர் ஏஜன்சியில் மோசடி உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு
ஓலா ஸ்கூட்டர் ஏஜன்சியில் மோசடி உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு
ஓலா ஸ்கூட்டர் ஏஜன்சியில் மோசடி உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு
ஓலா ஸ்கூட்டர் ஏஜன்சியில் மோசடி உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 21, 2024 04:32 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் ஓலா ஸ்கூட்டர் நிறுவனத்தில் வாகனம் வாங்க சென்றவரின் பணத்தை பெற்று ஸ்கூட்டர் வழங்காமல் மோசடி செய்த உரிமையாளர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
ராமநாதபுரம் அருகே கீழக்கரை சொக்கநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் 45. இவர் ராமநாதபுரம் ஓலா ஸ்கூட்டர் ஏஜன்சியில் ரூ.1.64 லட்சம் செலுத்தியுள்ளார். இதற்கான வாகனத்தை 2024 ஏப்.20 ல் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஓலா ேஷாரூம் உரிமையாளர் முரளிதரன் ரூ.15 ஆயிரத்தை மூன்று தவணைகளில் பிரேம்குமார் அலைபேசியில் ஜி-பே மூலம் திருப்பி அனுப்பியுள்ளார். வாகனத்தின் விலை 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 என்பதால் பணத்தை திருப்பி அனுப்பியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து 2024 ஏப்.24ல் ஸ்கூட்டர் ஒன்றை பிரேம்குமாரிடம் வழங்கியுள்ளனர். அந்த வாகனத்தை 20 நாட்கள் கழித்து பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பிரேம்குமார் கொண்டு சென்றுள்ளார். அங்கு வாகனம் வேறு ஒருவர் பெயரில் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் வாகனம் பிரேக் பிடிக்காததால் பிரேம் குமார் ஓலா ஸ்கூட்டர் ஏஜன்சி ேஷாரூமில் சர்வீஸ் மேலாளர் அருள்பிரகாஷிடம் ஒப்படைத்துள்ளார்.
அதன் பிறகு அந்த வாகனத்தை பிரேம்குமார் கேட்ட போது அருள் பிரகாஷ் எடுத்துச் சென்று விட்டதாக ேஷாரூம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரேம்குமார் ராமநாதபுரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராமநாதபுரம் ஓலா ஸ்கூட்டர் ஏஜன்சி உரிமையாளர் ராமநாதபுரம் நடுத்தெரு முரளிதரன்,
நிறுவனத்தின் மேலாளர் ஸ்ரீராம், சர்வீஸ் மேலாளர்கள் அருள்பிரகாஷ், சந்தோஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.