ADDED : ஜூலை 09, 2024 09:15 PM

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மருதங்கநல்லுார் கிராமத்தில் கண்மாய்க்கரை அருகே கஞ்சா செடி வளர்த்த சக்திவேல் கைது செய்யப்பட்டார்.
கமுதி அருகே மருதங்கநல்லுார் கண்மாய்க்கரை அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மருதங்கநல்லுார் அய்யனார் கோயில் கண்மாய்க்கரை அருகே சோதனை செய்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வழிவிட்டான் மகன் சக்திவேல் 19, கண்மாய் கரையில் 8 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்த்திருந்தது தெரிய வந்தது. சக்திவேலை இன்ஸ்பெக்டர் துரைபாண்டி கைது செய்தார்.